Type Here to Get Search Results !

சொந்த செலவில் சிமெண்ட் ஜல்லி கலவையை கொட்டி சாலையை சீர் செய்த போக்குவரத்துக் காவலர்கள் (Video)

0

சொந்த செலவில் சாலையை சீர் செய்த போக்குவரத்துக் காவலர்கள் ...

சென்னை மாநகராட்சி சாலையை சீரமைக்கும் என காத்திருக்காமல் தாங்களே முன்வந்து சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள் .. Sondha selavil salaiyai seer seidha Pokkuvarathu kavalargal,Traffic Police repaired the road at their own expense, Vinodha seidhi

சென்னையை அடுத்த எண்ணூரில் போக்குவரத்துக் காவலர்கள் இருவர் தங்கள் சொந்த செலவில் சிமெண்ட் ஜல்லி கலவையை சாலையில் கொட்டி சீர் செய்த நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்ப்பதோடு பாராட்டுக்குரியதாக மாறி இருக்கிறது.


எண்ணூரில் M5 போக்குவரத்து காவல் நிலையத்தில் சரவணன் என்பவரும் பாஸ்கரன் என்பவரும் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். விரைவு சாலை சந்திப்பான பாரதியார் நகர் பேருந்து நிறுத்தம் பகுதி அதிக விபத்து ஏற்படும்  இடமாக உள்ளது இதற்கு சாலை பள்ளங்கள் முக்கிய காரணியாக விளங்குகின்றது. இதனைக் கண்ணுற்ற போக்குவரத்து காவலர்கள் சரவணன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் தங்கள் சொந்த செலவில் சிமெண்ட் ஜல்லி கலவையை கொட்டி சீர் செய்தனர்.

சென்னை மாநகராட்சி சாலையை சீரமைக்கும் என காத்திருக்காமல் தாங்களே முன்வந்து சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள் செயல் வாகன ஓட்டிகள், பொதுமக்களின் கவனத்தை கவர்ந்தது அனைவரின் பாராட்டுக்குரியதாக மாறியிருக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்