கர்ப்ப காலத்தில் கணவனுடன் கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்வதால் பல ஆச்சரிய நன்மைகள் பெண்களுக்கு 
கிடைக்கின்றன அவற்றில் 10 நன்மைகளை இங்கே பதிவு செய்துள்ளோம்.
கிடைக்கின்றன அவற்றில் 10 நன்மைகளை இங்கே பதிவு செய்துள்ளோம்.
Also Read: கர்ப்ப காலத்தின் போது உடலுறவு வைத்துக்கொள்வது ஆபத்தானதா?
1) இந்த சமயத்தில் பெண்கள் அதிகமாக உச்சகட்டம் அடைதல்
கர்ப்ப
 காலத்தில் உங்களது ஹார்மோன்கள் உச்ச நிலையில் இருக்கும். மேலும் உங்களது 
மார்பகம் மற்றும் இடுப்பு எலும்பு பகுதியில் இந்த சமயத்தில் இரத்த ஓட்டம் 
அதிகமாக இருக்கும் எனவே நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு 
உச்சநிலையை அடையலாம். கர்ப்ப காலத்தில் பெண்கள் அடையும் உச்சநிலையானது 
மறக்க முடியாததும், அதிகமானதாகவும் இருக்கும்.
2) கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கிறது
கர்ப்ப
 காலத்தில் உடலுறவின் போது உச்சமடையும் போது ஆக்ஸிடோசின் வெளிப்படுகிறது. 
இது மகிழ்ச்சிக்கான ஒரு ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் வெளிப்படுவதால் 
கணவன் மனைவிக்கு இடையே உள்ள நெருக்கம் அதிகரிக்கிறது.
3) உடலிற்கு மிகவும் ஆரோக்கியமானது
பெண்கள்
 தங்களது கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது என்பது மிகவும் 
ஆரோக்கியமான ஒன்றாகும். இந்த கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதால் 
உங்களது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில்
 நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பெண்களுக்கு இது மிகவும் 
சிறந்ததாகும்...
4) கலோரிகள் குறைக்கலாம்
கர்ப்ப காலத்தில் 
உடற்பயிற்சி செய்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உடற்பயிற்சி 
கர்ப்ப காலத்தையும், பிரசவத்தையும் எளிமையாக்குகிறது. நீங்கள் கர்ப்ப 
காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதால் 50 முதல் 150 கலோரிகள் வரை 
குறைக்கலாம். இது நீங்கள் எவ்வளவு நேரம் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பதை 
பொருத்து மாறுபடும்.
5) பெண்ணையும் குழந்தையையும் மகிழ்ச்சியாக்குகிறது
கர்ப்ப காலத்தில் பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது என்பது மிக மிக அவசியமான 
ஒன்றாகும். இவ்வாறு ஒரு கர்ப்பிணி மகிழ்ச்சியாக இருந்தால் தான், கருவில் 
குழந்தையும் மகிழ்ச்சியாக இருக்கும். உடலுறவு என்பதை ஒரு பெண்ணை 
மகிழ்ச்சியாக்குகிறது. அதோடு மட்டுமின்றி கருவில் இருக்கும் குழந்தையும் 
மகிழ்ச்சியாக இருக்கிறது.
6) இரத்த அழுத்தம் சமநிலையை அடைகிறது
கர்ப்ப
 காலத்தில் பெண்களுக்கு வரும் பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்று தான் 
இரத்த அழுத்தம்.. கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதால் இந்த இரத்த 
அழுத்தமானது சமநிலையை அடைகிறது.
7) பிரசவம் சுலபமாகிறது
கர்ப்ப 
காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது பிரசவ காலத்தில் மிக முக்கியமாக 
செயல்படும் இடுப்பு எழும்புகள் வலிமையடையும். இதனால் பிரசவம் 
சுலபமாகிறது..! 74% வலியை தாங்கும் சக்தி அதிகரிப்பதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது 
8) நிம்மதியான நல்ல தூக்கம்
உடலுறவுக்கு பின்னர் வெளிப்படும் என்டோபிசின் என்ற ஹார்மோன் ஆனது உங்களை இன்பத்தின் 
உச்சிக்கு எடுத்துச் செல்லும். இதனால் நீங்கள் மனநிறைவான, நிம்மதியான 
தூக்கத்தை பெறலாம்..
9) வலியை தாங்கும் சக்தி
கர்ப்ப காலத்தில் உறவு கொள்வது ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் சுரப்பதை தூண்டுகிறது. இதனால் 74% வலியை தாங்கும் சக்தி அதிகரிப்பதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது10) மன ஊக்கம், மன உறுதி பெறலாம்
கர்ப்ப காலத்தில் 
பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால் சில பெண்களுக்கு 
தன் அழகில் சந்தேகம் வரும். உடலுறவு என்பது பெண்களுக்கு தங்களது 
வெளித்தோற்றத்தின் மீது ஒரு நம்பிக்கையை வர செய்யும். இதனால் பெண்கள் 
தங்களை நேசிப்பார்கள். மனது உறுதியாகும்.

Social Plugin