Type Here to Get Search Results !

ATM கார்டு செயலிழந்ததால் காஞ்சிபுரம் கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்ய நாட்டு வாலிபர்!

ATM ல் பணம் எடுக்க முடியவில்லை, காஞ்சிபுரம் கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்ய நாட்டு வாலிபர், உதவி செய்த காவல் துறை!

இந்திய கோவில்கள் மீது ஆர்வம் கொண்ட ரஷிய  நாட்டு வாலிபர் காஞ்சீபுரம் கோவிலை சுற்றி பார்க்க வந்த போது நடந்த சம்பவம்.  
பணம் எடுக்க அவரது சர்வதேச ATM கார்டை உபயோகித்திருக்கிறார் அனால் துரதிர்ஷ்ட வசமாக ATM பின்னை மறந்து விட்டு தவறாக அடித்துள்ளார் மூன்று முறை தவறாக அடித்ததால் கார்டு லாக்காகி விட்டது அதனால் அவருக்கு சாப்பிட கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. என்ன செய்வது என தெரியாமல் இரவு பசியுடன் கோவில் வாசலிலேயே படுத்து உறங்கியுள்ளார். விடிந்து பார்த்ததும் அங்கே கோவில் வாசலில் சிலர் பணத்திற்காக பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதை பார்த்ததும். தனது கையில் பணம் இல்லாததால் காஞ்சிபுரம் குமரகோட்டம் பகுதியில் உள்ள முருகன் கோவில் வாசலில் நின்று தன்னிடமிருந்த தொப்பியை கவிழ்த்தி பிச்சை எடுத்துள்ளார். பிச்சை எடுக்க தனது தொப்பியை ஏந்தினார். யாரென தெரியாமல் பொதுமக்கள் அவருக்கு உதவியும் செய்துள்ளனர். 
இது குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் உதவி ஆய்வாளர் துளசி ரஷ்ய வாலிபருக்கு பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.




Russia youth beg in tamilnadu temple kanjeevaram muruga temple news in tamil