Type Here to Get Search Results !

இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலா ஆகியோர்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது...

0
இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலா ஆகியோர்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது...

கைலாஷ் சத்யார்த்தி 
மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்த கைலாஷ் சத்யார்த்தி டெல்லியில் வசித்து வருகிறார். இவர் தனது பச்பான் பச்சோ அந்தோலன் என்ற அமைப்பின் மூலம் சுமார் 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார்.
Malala Yousafzai and Kailash Satyarthi win Nobel Peace prize for 2014

பாகிஸ்தான் சிறுமி மலாலா

இதேபோல் பாகிஸ்தானில் 1997ஆம் ஆண்டு பிறந்தவர் சிறுமி மலாலா. அவர் பிறந்த பகுதியில் பெண்கள் கல்வி கற்க தலிபான் தீவிரவாதிகள் தடை விதித்திருந்தனர். தலிபான்களின் ஒடுக்குமுறை குறித்து பிபிசி செய்தியின்  உருது மொழி இணையதளம் வழியாக விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு வந்தார். பின்னர் வெளிப்படையாக தொலைகாட்சிகளிலும் பேட்டியளித்தார் சிறுமி மலாலா. இதனால் அவள் மீது கோபம் கொண்ட தலிபான் தீவிரவாதிகள் 2012ஆம் ஆண்டு மலாலாவை கொல்ல முயற்ச்சி செய்தனர்.

தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நிலையில் இங்கிலாந்து நாட்டிற்குள் அடைக்கலம் புகுந்தார் மலாலா.  அதன் பின்னர் தொடர்ந்தும் அங்கிருந்துகொண்டே பெண்களின் கல்வி முன்னேற்றம் பற்றிய பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இதனால் மலாலாவின் பிறந்த நாளை ஐ.நா. "மலாலா தினம்" என்று கடைபிடிக்க கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Malala Yousafzai and Kailash Satyarthi win Nobel Peace prize for 2014, Nobel prize winner from india, amaidhikkaana nobel parisu, daily tamil news, dinamalar news, dailythanthi news, dainakaran news

கருத்துரையிடுக

0 கருத்துகள்