Type Here to Get Search Results !

இதே நிலை தான் இந்தியாவில் பெண்களுக்கும்..

0
இடது பக்கமுள்ள படம் இதற்கு முன் சீனாவில் ஒரு மிருககாட்சி சாலையில் ஒருவர் புலி இருக்கும் பகுதிக்குள் வேண்டுமென்றே சென்றார், புலி அவரை கொடூரமாக தாக்கி இழுத்து சென்றது. சுதாரித்து கொண்ட மிருககாட்சி சாலை ஊழியர்கள் புலியை மயக்க மருந்து தோட்டா மூலம் மயக்கமடைய செய்து அவரை காப்பாற்றினர். வலது பக்கமுள்ள படம் இந்தியாவில் புலியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டவர்.
Awareness post for women safety, self defense, Pengal vilippunarvu thagaval

இதே நிலை தான் இந்தியாவில் பெண்களுக்கும்,உணவிற்கு கொலை செய்யும் புலிபோல உடலுக்கு கற்பழிக்கும் ஆண் மிருகங்கள் உலகமெங்கும் இருக்கின்றன. சில மேலை நாடுகளில் பாலியல் உணவுகள் எளிதாக கிடைப்பதால், அது பற்றி விழிப்புணர்வால் பசியில்லாமல் இருக்கிறார்கள்.சில நாடுகளில் மயக்க மருந்து துப்பக்கி போல சட்டங்கள் கடுமையாக உள்ளன. ஆனால் இந்தியாவில் இந்த இரண்டுமே இல்லை.

ஒன்று பெண்களை உடலாக மட்டும் பார்க்காத ஒரு கலாச்சாரம் ஏற்பட்டு ஆண்கள் பசியில்லாமல் இருக்க வேண்டும், அல்லது பசித்தாலும் விருப்பமில்லாத இரையை தொட முடியாதபடி சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். இது இரண்டுக்குமே இன்னும் சில காலம் பிடிக்கும். இது பிற்போக்கு தனமாக தெரிந்தாலும் சரி, அதுவரை பெண்கள் தான் தங்களை மிருகங்களுக்கு உணவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வன்புணர்வது மிருகம் என்று தெரிந்தும். இல்லை நான் கூண்டுக்குள் தான் செல்வேன், மிருகம் என்னை கடிக்க கூடாது என்று சொன்னால், அது மிருகத்தின் அறியாமையல்ல உங்கள் அறியாமை தான்..."அஞ்சுவது அஞ்சுதல் அறிவார் தொழில்" என்பது வள்ளுவன் வாக்கு.
- Boopathy Murugesh
Awareness post for women safety, self defense, Pengal vilippunarvu thagaval, angalidam irundhu thannai katthukolla pengal enna seiyya vendum 

கருத்துரையிடுக

0 கருத்துகள்