36 ஆண்டுகளுக்கு பிறகு தாயின் கர்ப்பத்தில் இருந்து பிறக்காத குழந்தை எலும்புக்கூட்டை நீக்கியுள்ளனர் இந்திய மருத்துவர்கள்..
மத்திய பிரதேச மாநிலம் பிபரியா நகரை சேர்ந்த கண்டபி குன்வன்ட் தாக்ரே(60) , வயிறு வலி மற்றும் சிறுநீரக தொல்லை காரணமாக மருத்துவமனையை நாடியுள்ளார், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய வயிற்றில் கட்டி இருப்பதாக முதலில் எண்ணினார் பிறகு அது ஏதோ ஒரு கடினமான பொருளாக இருப்பதாக முடிவு செய்தனர். மேலும் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருடைய கர்ப்பபையில் பிறக்காத குழந்தையின் எலும்புகள் இருப்பது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து அவருடைய வயிற்றில் இருந்த பிறக்காத குழந்தையின் எலும்புகளை நீக்கியுள்ளனர்.

ஒரு சிசுவின் எலும்புக்கூடுகளை அதிக காலம் கர்ப்பப்பையில் சுமந்த முதல் பெண் இவரே ஆவர்.
Tags: unborn-baby-skeleton-removed-after-36-years-in-inida, womb removed after 36 years, vinodha seidhugal, maruthuva sadhanai, adhiga naatkal thayin vayitril irundha kulandhai, maruthuva seidhigal, tamil news daily
Social Plugin