நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!
 
 ''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.
 
 ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,
 இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,
 மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,
 நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’
 
 இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். 
ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே 
சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’
 
 நோய் வந்த பிறகுதான் உடலைப் 
பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் 
பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் 
காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.
 
 உணவு, நீர், காற்று... இந்த
 மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் 
இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் 
வருகிறது.
 
 நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் 
சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், 
ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை 
ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், 
உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம்
 சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை 
இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். 
ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் 
முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய 
மூச்சுப் பயிற்சி அவசியம்.
 
 எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் 
குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ 
என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்

Social Plugin