Type Here to Get Search Results !

ஜிகர்தண்டா படத்தின் கதை கசிந்தது.!!

jigarthanda-tamil-movie-story
பீட்சா ஹிட்டுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் பக்கா மதுரை பேமஸ் குளிர்பானமான ‘ஜிகர்தண்டா’வை டைரக்ட் செய்து வருகிறார்.

சித்தார்த், லட்சுமிமேனன் நடிக்கிறார்கள். பைவ் ஸ்டார் கதிரேசன் புரட்யூசர். சத்தமே இல்லாமல் இதன் ஷூட்டிங் மதுரையில் நடந்து வருகிறது. படத்தோட பூஜை ஸ்டில்லைத் தவிர வேறெந்த இன்பர்மேஷனும் லீக் ஆகாம வச்சிருக்காங்க. ஆனா இப்போ படத்தோட ஸ்டோரி கொஞ்சம் லீக்காயிருக்கு. கதையை கேட்டீங்கன்னா இப்பவே படத்தை பார்க்ணும்போல இருக்கும். கசிந்த வரை கதை இதாங்க.

சினிமா சான்ஸ் தேடும் ஒரு டைரக்டர், ஒரு புரட்யூசர்கிட்ட ஒரு கதை சொல்கிறார். கதை மதுரையில் உள்ள தாதாக்கள் பற்றியது. ஒரு மதுரை தாதா என்னென்ன கோல்மால்  வேலை செய்வான். பொண்ணுங்களை எப்படி டீல் பண்ணுவான். எதிரிங்களை எப்படி பந்தாடுவான். போலீசை எப்படி டபாய்ப்பான்னு கதை சொல்வார். அவர் சொல்லும் கதை அப்படியே திரையில் நடக்கும் இது முன்பாதி. கதை சொல்லி முடித்ததும். அந்த புரட்யூசர் "கதை நல்லா இருக்கு தம்பி எதுக்கும் நீங்க ஒரு தடவை மதுரை பக்கம் போயி லொக்கேஷன் பார்த்துட்டு  கதையும் ஸ்டெடி பண்ணிட்டு வாங்க"ன்னு அனுப்புகிறார். மதுரை வந்து சேரும் இயக்குனர் இங்குள்ள நிஜ தாதாக்களை சந்திக்கிறார். அவர் கதையில் இருந்த தாதாக்கள் அப்படியே உல்டாவா இருப்பார்கள். அதை அப்படியே காமெடியாக்கி சொல்வது மீதிகதையாம். அதாவது இதுவரைக்கும் வந்த மதுரை பேக்ராப் படங்களுக்கெல்லாம் காமெடி ஆப்பு வைக்கிறதுதான் ஜிகர்தண்டாவாம்.