Type Here to Get Search Results !

முகேஷ் அம்பானிக்கு ஏன் z பிரிவு பாதுகாப்பு ? நீதிமன்றம் கேள்வி

Mukesh Ambani's Z-class security முகேஷ் அம்பானிக்கு ஏன் z பிரிவு பாதுகாப்பு ? நீதிமன்றம் கேள்வி

முகேஷ் அம்பானிக்கு ஏன் z பிரிவு பாதுகாப்பு ? நீதிமன்றம் கேள்வி
Mukesh Ambani's Z-class security முகேஷ் அம்பானிக்கு ஏன் z பிரிவு பாதுகாப்பு ? நீதிமன்றம் கேள்வி

Mukesh Ambani's Z-class security

புதுடில்லி: "தொழில் அதிபர், முகேஷ் அம்பானிக்கு, "இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது ஏன்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

"ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின், இயக்குனரான முகேஷ் அம்பானிக்கு, சில மாதங்களுக்கு முன், பயங்கரவாதிகளிடமிருந்து, அச்சுறுத்தல் வந்ததாக, தகவல் வெளியானது. இதையடுத்து, தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதை பரிசீலித்த, மத்திய உள்துறை அமைச்சகம், இரண்டு மாதங்களுக்கு முன், முகேஷ் அம்பானிக்கு, "இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு அனுமதித்தது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:நாட்டில் உள்ள, சமானிய மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது முக்கியமா; தொழில் அதிபருக்கு, பாதுகாப்பு அளிப்பது முக்கியமா. தலைநகர் டில்லியில், ஐந்து வயது குழந்தை, பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டது. இந்த குழந்தைக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத அரசு, தொழில் அதிபருக்கு, எந்த அடிப்படையில் பாதுகாப்பு வழங்கியது.இவ்வாறு நீதிபதிகள், கேள்வி எழுப்பினர்.

பாதுகாப்பு தேவை என்றால் இவரை போல பெரும் பணக்காரர்கள் தனது சொந்த செலவில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து ஏற்ப்பாடு செய்துகொள்ள வேண்டும், அதை விட்டு விட்டு அரசு செலவில் மக்கள் பணத்தை ஒருவருக்காக விரய செலவு செய்வது கண்டிக்கத்தக்கது என நீதிமன்றம் கூறியுள்ளது.

Mukesh Ambani: why 'z' security to a business man, asks supreme court | Mukesh ambani security wasting peoples money to a bunsiness man | Tamil news | Tamil paper news online, Tamil, Tamil news paper, daily news in Tamil