Type Here to Get Search Results !

இயற்கை வளர்ச்சி ஊக்கி: பயிர்கள் நன்கு செழித்து வளர உதவும் தேங்காய்ப்பால் மோர் கரைசல் - தயாரிக்கும் முறை

iyarkai velanmai, Vivasayam, iyarkai vivasayam, thengai paal mor karaisal thayarikkum murai, payangal, natural farming, organic farming tips tricks techniques in tamil

 

தேங்காய்ப்பால் மோர் கரைசலின் பயன்கள்

  • பயிர்கள் நன்கு செழித்து வளரும் 
  • பூச்சிகளை விரட்டும் குணம் கொண்டது
  • பூஞ்சாண நோயை தாங்கி வளரும் 
  • பயிர்களில் பூக்கும் திறனை அதிகரிக்கும்
  • பூ, பிஞ்சுகள் அதிகம் பிடிக்கும்
  • தரமான காய்கள் கிடைக்கும்
  • சந்தையில் அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது
  • வெளி மார்க்கெட்டிற்கு கொண்ட சென்றால்காயின் தன்மை மாறாமல் இருக்கும் 

தேங்காய்ப்பால் மோர் கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள்:

1. மண்பானை - 1
2. நன்கு புளித்த மோர் -5 கிலோ 
3. தேங்காய் - 10
4. தண்ணீர் - 5 லிட்டர்
 

தேங்காய்ப்பால் மோர் கரைசல் தயாரிக்கும் முறை:

முதல்படி
முதலில் ஒரு மண்பானையை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதில் 10 தேங்காயையும் உடைத்து துருவி ஆட்டி 5 லிட்டர் தண்ணர் கலந்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காய் உடைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தேங்கா
ய்ப்பால் மோர் கரைசல் இரண்டாம்படி
மண்பானையில் நன்கு புளித்த மோர் 5 லிட்டர் மற்றும் தேங்காய்பால் 5 லிட்டர் இரண்டையும் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.கந்து 7 நாட்கள் வரை ஊறவிட்டு தினமும் கலக்கி விட வேண்டும்
 
தேங்கா
ய்ப்பால் மோர் கரைசல் மூன்றாம்படி
7 நாட்களுக்கு பிறகு ஊறவைத்த கரைசலை எடுத்து 1 லிட்டர் கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் ( 1 : 10) என்ற விகிதத்தில் கலக்க வேண்டும்
பயன்படுத்தும் பயிர்கள்
அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பயன்படுத்தும் அளவுகள்
( 1 : 10 ) என்ற விகிதத்தில் கலந்து வைத்த கரைசலை அனைத்து வகை பயிர்களுக்கும் தெளிக்கலாம். 
தெளிக்கும்போது பயிர்களில் நன்கு நனையுமாறு மாலை வேளையில் தெளிக்க வேண்டும் 
பூ பூக்கும் சமையத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். 
via @Madhu Balan
iyarkai velanmai, Vivasayam, iyarkai vivasayam, thengai paal mor karaisal thayarikkum murai, payangal, natural farming, organic farming tips tricks techniques in tamil