Type Here to Get Search Results !

தம்பதிகள் தாம்பத்திய உறவில் ஈடுபட மறுப்பதற்கு சில முக்கிய காரணங்கள்

Thirumanam aana thambadhigal udaluravil eedubada maruppadhan mukkiya kaaranangal: 

திருமணமான ஆணோ, பெண்ணோ தன் துணைக்கு உடலுறவில் சுகம் கொடுக்காமல் மறுப்பதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன...
thambathya uravu, paliyal kalvi, udaluravu marukkiraal, kanavan manaivi uravu

  • பார்க்க கவர்ச்சிகரமாக இல்லை.
  • பார்த்தாலே பிடிப்பதில்லை.
  • துணையின் எதிர்பார்த்த வருமானத்தில் திருப்தி இன்மை.
  • வசதியான வாழ்க்கையை எதிர்பார்த்து, ஏமாறுவது.
  • இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தாலும் அதை வெளிக்காட்டாமல், துணையைக் தனது கட்டுப்பாடிற்குள் வைத்திருக்க நினைத்து  உடலுறவிற்கு மறுப்பது.
  • சிலர் இயல்பாகவே செக்ஸில் ஆர்வம் இல்லாமல் இருப்பது.
  • உச்சகட்டம் அடைந்து சுகம் கிடைப்பதற்கு முன்பு விரைவாகவே உடலுறவை முடித்துக் கொள்வது.
  • கணவனுக்கும் மனைவிக்கும் பணி நேரம் மாறி மாறி அமைவது.
  • கணவர் விரும்பும் போது மனைவி சோர்வாக இருந்தால், ‘இப்போது வேண்டாமே...’ என்பார். மனைவி விரும்பும் போது கணவர் சோர்வாக இருந்தால், ‘இப்போது வேண்டாமே...’ என்பார்.

செக்ஸ் மறுக்கப்படுவதால் ஆணும் பெண்ணும் மனரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குடும்ப வாழ்க்கை விரிசலுக்கு ஆளாகிறது. தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. செக்ஸ் உறவு மறுக்கப்படுபவர்கள் தங்களை முழுமையான ஆணாகவோ, பெண்ணாகவோ உணர்வதில்லை. வெறுப்புணர்வு, கோபம், தன்னம்பிக்கையை இழத்தல், மன உளைச்சல், வன்முறைக்கு தூண்டுதல் போன்ற விளைவுகளும் நிகழ்கின்றன. ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் பிரிந்து வாழ்வார்கள். நிறைய விவகாரத்துகளுக்கு செக்ஸ் மறுப்பே காரணம்.

தாம்பத்திய உறவில் தற்போதைக்கு இஷ்டமில்லை என்றால் எப்படி தெரியப்படுத்தலாம்..?


உடலுறவு மறுக்கப்பட்டால், அதற்கான காரணத்தை சக துணையிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். உடல்ரீதியாக பிரச்னைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி சரிசெய்து கொள்ள வேண்டும். பெண்கள், அந்தரங்க உறவை காரியத்தை சாதிக்கும் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. மூடு இல்லை என்றால் அதைப் பக்குவமாக விளக்குவது நல்லது. ‘முடியாது’ என பட்டென்று கூறி, துணைக்கு செக்ஸ் மீது இருக்கும் நம்பிக்கையை குலைத்துவிடக் கூடாது.

thambathya uravu,  Thirumanam aana thambadhigal udaluravil eedubada maruppadhan mukkiya kaaranangal, udaluravu, illaara inbam, kanavan manaivi idaiye punarchi illaadha kaaranam, paliyal kalvi, Andharangam