Type Here to Get Search Results !

மருத்துவமனை அதிகாரியை மயக்கி 8 பவுன் நகையை திருடிச் சென்ற பெண்

0
இப்பொழுதெல்லாம் நல்லவர் யார் கெட்டவர் யார் என கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. சில பெண்கள் கைகுழந்தைகளை  வைத்துகொண்டு அப்பாவி பெண்போல நம் கண்களுக்கு தோற்றமளித்து  நமக்கு தெரியாமலோ அல்லது தெரிந்தோ தனது கைவரிசையை காட்டுகின்றனர்.  திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் நூதனமாக ஈடுபடுகின்றனர்.  இதனால் நிஜமான அப்பாவி பெண்கள் மீது இறக்கம் காட்டவே நமக்கு பயமாக உள்ளது.

இப்படிதான் சென்னை எழும்பூரில் ஒரு சம்பவம் நிறைவேறியுள்ளது. திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் வெண்ணிலா(53). இவர் எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் ஆவணப் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர் திங்கள்கிழமை பணி முடிந்து அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது, அவரை கையில் ஒரு குழந்தையுடன் சந்தித்த ஒரு பெண், சாப்பிட்டு 2 நாள்கள் ஆகிறது அகவே தன்னிடமுள்ள நகைகளை வாங்கிக் கொண்டு பணம் தரும்படி கூறினாராம். அதற்கு அதிகாரி வெண்ணிலா மறுத்துவிட்டாராம்.

funny indian women with gold jewels, gold chain snatching

அந்த நேரத்தில் வெண்ணிலாவின் முகத்தில் ஏதோ அழுக்கு இருப்பதாகக் கூறி ஒரு கைக்குட்டையை அவருடைய முகத்தின் அருகே அந்தப் பெண் கொண்டு சென்றார். கைக்குட்டையை நுகர்ந்த வெண்ணிலா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

மயக்கம் தெளிந்து விழித்தபோது..


அவர் அணிந்திருந்த 8 பவுன் நகை திருடப்பட்டதும், கைக்குழந்தையுடன் வந்த பெண் அங்கிருந்து தப்பியோடியிருப்பதும் தெரியவந்தது.

noodhana thiruttu, nagai thiruttu, thiruttu pengal, awareness, viippnarvu thagaval, mayakka marundhu koduthu kollai, kai kulandhai thirudi, tamil news, lady thief, women thief, chain stealing women

.

கருத்துரையிடுக

0 கருத்துகள்